சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந் திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்ட சபைத் தேர்தலில், சிவசேனா – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், இவ்வாறு அவர், தனதுகருத்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, தொகுதி பங்கீடு அணுகு முறைகள் சரிவர நடை பெறவில்லை என்ற பாஜக.,வினரின் கருத்துகள் சரியானவைதான் என்றார்.
சிவசேனா – பாஜக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தாம் பங்கேற்கவில்லை என்று கூறிய அத்வானி, மகாராஷ்டிராவில் பாஜக, அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது..
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.