தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமைவழங்க தயார்

 தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமைவழங்க தயாராக உள்ளதாக மத்திய உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்திய உணவுக்கழக அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக் கிழமை அவர் சென்னைவந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஸ்வான் பேசியது:

உணவுப் பாதுகாப்புச் சட்ட த்தினை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் இந்தச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளை பொருளாதார அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பணிகளை மாநிலஅரசுகள் மேற்கொள்ளும்.

கடந்த அக்டோபர் 4-ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமலாக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. தற்போது அந்தகால அவகாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத்துறை அமைச்சராக நான் பதவியேற்கும்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.

ஒரு சிலநேரங்களில் குறிப்பிட்ட காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவது இயற்கையானது தான். அதே வேளையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தின் தேவைக்கு கூடுதலாக கோதுமை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமையை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.

அனைத்து மாநிலங்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு போதுமான உணவுப் பொருள்கள் கையிருப்பு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினத்துக்கு கூடுதல் உணவுப்பொருள்களை வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.

நியாய விலைக்கடைகளில் அனைத்து நாள்களும் மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...