5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல்விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைந்தது. சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங் கள் பெட்ரோல் விலையை நிர்ணயம்செய்து வருகின்றன.
15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் இது போல விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை குறைந்து வருகிறது.
இந்தநிலையில் டீசல் விலையை குறைப்பது என நேற்று கூடிய மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டமுடிவில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறும்போது, ''கடந்த 5 ஆண்டுகளாக டீசல்விலை மாதந்தோறும் 50 பைசா உயர்ந்து வந்தது. இப்போது டீசல் விலை சர்வதேச சந்தை விலையைவிட அதிகமாக இருக்கிறது. எனவே டெல்லியில் நள்ளிரவு முதல் டீசல்விலை லிட்டருக்கு ரு.3.37 குறையும்'' என்றார்.
இதன் மூலம் மத்திய அரசுக்கு டீசல் விற்பனையில் ஏற்பட்டுவந்த மிகப் பெரிய மானியச்சுமை குறைந்தது. இனி பெட்ரோல் விலையை போல டீசல் விலையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைக்கும் என்றும் அருண்ஜெட்லி கூறினார்.
சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.3.65 குறைந்து ஒருலிட்டர் ரூ.59.27 ஆனது. மும்பையில் லிட்டருக்கு ரூ.3.72-ம், கொல்கத்தாவில் ரூ.3.51-ம் குறைந்தது.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.