மஹாராஷ்ட்ரா, ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக

 இந்தியாவில் நடந்துமுடிந்த மஹாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட வெற்றி விவரங்கள் காலையில் இருந்து வெளியாகிவருகின்றன. அவை இரு மாநிலங்களிலுமே மத்தியில் ஆளும் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்பதை காட்டுகின்றன.

மஹாராஷ்ட்ராவின் மொத்தமுள்ள 288 இடங்களில் 287 இடங்களுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக 115 இடங்களிலும், சிவசேனா 61 இடங்களிலும், காங்கிரஸ் 48 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 9 இடங்களிலும், மற்ற கட்சிகள் 20 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களுக்கான முன்னணி நிலவரங்களும் வெளியாகத்துவங்கியுள்ளன. அதன்படி பாஜக 51 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தள் 17 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

இந்த போக்கு இப்படியே நீடித்து இறுதி முடிவுகளாகவும் மாறும்பட்சத்தில் ஹரியானாவில் பாஜக தனியாகவே ஆட்சியமைக்கும். மஹாராஷ்ட்ராவில் சிவசேனை அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அரசு அமைக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

மேலும் அரியானாவை பொறுத்தவரையில், முதன் முதலாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜக.,வுக்கு கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக.,வின் செய்திதொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேன், 'அரியானா, மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி மீது அம்மாநில மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது,' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...