31-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்

 பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாஜ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பிறகு தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றுக்கட்சி பாரதீய ஜனதாதான் என்று நாங்கள் சொல்லி வருகிறோம். தமிழகத்தில் எங்கள் கட்சியை பலப்படுத்த, பொறுப்பா ளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ராஜீவ்பிரதாப் ரூடியின் வழிகாட்டுதல் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது.

தமிழகத்தில் பாஜக.,வுக்கு தற்போது 10 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழக அரசு ஆவின்பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. இதை எதிர்த்துவருகிற 31-ந் தேதி சென்னையில் பாஜ போராட்டம் நடத்த இருக்கிறது. அதைத்தொடர்ந்து நவம்பர் முதல்வாரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும். பால்விலை உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். ஆவின் நிறுவனம் வணிகநோக்கில் செயல்படக் கூடாது. சேவை நோக்கில் செயல்படவேண்டும்.

கூட்டணியில் இருப்பவர்கள் கருத்துகூற சுதந்திரம் இருக்கிறது. அதனை தெளிவுபடுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது. சிலகருத்துகளை கூறுவதனால் கூட்டணி உடைந்துவிட்டது என்று கூறமுடியாது. டெல்லியில் பிரதமரின் விருந்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப் படாததால் எங்களுக்குள் ஏதோ விரிசல் வந்து விட்டது என்பது போல சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். அது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

ரஜினி காந்தை நாங்கள் வலியப்போய் அழைக்கவில்லை. தேசிய எண்ணம் கொண்ட திரைப்பட கலைஞரான அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம்.

ரஜினிகாந்த் மட்டுமல்ல. தேசிய எண்ணம்கொண்ட மற்ற நடிகர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் என்று எந்தத் துறையில் இருந்தாலும் அவர்கள் எங்களுடன் இணையவேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியின் தலைமை, எங்கள் கொள்கை, எங்கள் தொண்டர்களின் அர்ப் பணிப்பு ஆகியவற்றை நம்பித் தான் எங்கள் கட்சி உள்ளது .

தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரும் சக்தியாகமாறி அடித்தட்டு மக்களின் ஆதரவுடன் 2016-ல் பெரிய வெற்றியை பெற்று ஆட்சியைபிடிக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...