மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி

 மகாராஷ்டிராவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்னாவிஸ் தலைமை யிலான அரசு குரல் வாக்கெடுப்பின் மூலம் வெற்றிபெற்றது.
.

முன்னதாக சட்டமன்ற சபாநாயகராக பாஜக.,வை சேர்ந்த ஹரிபாவ் பக்டே ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் சிவசேனா வேட்பாளர்கள் கடைசிநேரத்தில் வாபஸ் பெற்றுகொண்டனர்.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 15ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122-ல் வெற்றிபெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ளது. கவர்னர் விதித்த கெடுவின்படி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை வாக்குபெறுவதற்காக 3 நாள் சட்டமன்ற சிறப்புகூட்டம் நேற்று தொடங்கியது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற பின் சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆளும் பாஜக சார்பில் ஹரிபாவ் பக்டே, காங்கிரஸ் சார்பில் வர்ஷாகேக்வாத்,சிவசேனா சார்பில் விஜய் ஆவ்டி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மும்முனைப் போட்டி ஏற்பட்டிருந்த நிலையில், பாஜக வேட்பாளர்தவிர மற்ற இருவரும் வாபஸ் பெற்றுகொண்டனர். இதையடுத்து பாஜக உறுப்பினர் ஹரிபாவ் பக்டே ஒரு மனதாக சபாநாயகரானார். இதுபற்றிய அறிவிப்பை காலை 11 மணிக்கு தற்காலிக சபாநாயகர் ஜிவா பாண்டுகவித் அறிவித்தார். இதையடுத்து ஒத்துழைப்புதந்த எல்லா கட்சிகளுக்கும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்தார். இதை யடுத்து தேவேந்திர பட்வாஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து குரல்வாக்கெடுப்பில் அரசு வெற்றிபெற்றதாக அறிவிக் கப்பட்டது. முன்னதாக சிவசேனையின் மூத்த தலைவர் ராம்தாஸ் கடம் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், பாஜக மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். நேற்றிரவு எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது இந்த அரசை எதிர்த்து வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டது என்றார்.

இதனிடையே 41 உறுப்பினர்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் தனதுமுடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 246 ஆக குறையும். இதில் பெரும்பான்மை பெறுவதற்கு பாஜக வுக்கு 124 உறுப்பினர்களின் ஆதரவேபோதுமானது.

இந்நிலையில் எம்என்எஸ் உள்பட சில உதிரி கட்சிகளை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் பாஜக வை ஆதரிக்க முன்வந்தனர். இதனால் சட்ட மன்றத்தில் பாஜக வின் பலம் 135 ஆக உயர்ந்துள்ளது.

தேசியவாத காங்கிரசும் நேரடியாக பாஜக அரசை ஆதரிக்க முன் வந்தால் சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் 176 ஆக அதிகரித்துவிடும். இந்தநிலையில் எப்படி பார்த்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எளிதில் வெற்றிபெறும் சூழ்நிலை உருவாகி இருந்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...