தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் 2016-இல் பாஜக ஆட்சி அமைவது உறுதி

 தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் மகாராஷ்டிரம், ஹரியாணாவை போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்க முடியும் என்று மத்திய இணை அமைச்சரும், பாஜக தமிழகப் பொறுப்பாளருமான ராஜீவ் பிரதாப் ரூடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் நடைபெற்ற பாஜக மாநில பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசியது:

மகாராஷ்டிரத்தில் பாஜக இது வரை 119 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிட்டதே இல்லை. ஆனால், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 123 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்துள்ளோம்.

அதே போன்று ஹரியாணாவில் கடந்த தேர்தலில் 8 சதவீத வாக்குகளுடன் 4 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆனால், இப்போது 36 சதவீத வாக்குகளுடன் 46 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளோம்.

அடுத்து நடைபெறவுள்ள காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் நாம் வெற்றிபெறப் போவது உறுதி.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைப்போம் என்று கூறிய போது அதனை யாரும் நம்பவில்லை. கூட்டணி ஆட்சி அமையும், மூன்றாவது அணி தான் ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் பேசினார்கள்.

ஆனால், மக்களின் மகத்தான ஆதரவுடன் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதுபோல வரும் 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், பிகார் மாநிலங்களில் பாஜக ஆட்சிஅமைக்கும்.

தலைவர்கள் எப்படி வேண்டு மானாலும் பேசலாம். ஆனால், தொண்டர்கள் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வேலைசெய்ய வேண்டும். தொண்டர்கள் நம்பிக்கையுடன், கடுமையாக உழைத்தால் 2016-இல் பாஜக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்கமுடியாது.

தமிழகப் பொறுப்பாளராக இருந்த போது கடந்த 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 25-க்கும் அதிகமான கூட்டங்களுக்கு என்னை அமைப்புப் பொதுச் செயலாளர் எஸ். மோகன் ராஜூலு அழைத்துச் சென்றார். பல கூட்டங்களுக்கு 10 பேர் 20 பேர் தான் வந்தார்கள். அவர்களுக்காக நான் 45 நிமிடங்கள் பேசியதை இப்போதும் என்னால் மறக்க முடியாது .

இனி இந்நிலை மாறவேண்டும். 10 பேர் வந்த இடங்களிலும் 10 ஆயிரம் பேரைத் திரட்டவேண்டும், 1000 பேர் வந்த இடங்களில் 1 லட்சம்பேரை திரட்டவேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிள்ள அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும்வலிமை பாஜக.,வுக்கு மட்டுமே உள்ளது. இந்தபொன்னான வாய்ப்பை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராஜீவ்பிரதாப் ரூடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...