தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க நீடிக்கிறது

 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க நீடிப்பதாக மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அவர் மரியாதைசெலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை பாஜக அரசு நாடுமுழுவதும் அனுசரித்து வருகிறது. அவரது நினைவை போற்றும் மத்திய சாலை போக்கு வரத்துத் துறை சார்பில் இன்று பசுமைச்சாலைகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதன்படி நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப் படும். தமிழகத்தில் தாம்பரத்தில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர், பாரதியாரின் பிறந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாட உத்தரவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11-ஆம் தேதி நாடுமுழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் கட்டுரைப் போட்டி நடத்தப்படும்.

இலங்கைச் சிறையில் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மீனவர்களின் நலனுக்காக கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக நீடிக்கிறது. அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...