தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க நீடிக்கிறது

 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க நீடிப்பதாக மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அவர் மரியாதைசெலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை பாஜக அரசு நாடுமுழுவதும் அனுசரித்து வருகிறது. அவரது நினைவை போற்றும் மத்திய சாலை போக்கு வரத்துத் துறை சார்பில் இன்று பசுமைச்சாலைகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதன்படி நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப் படும். தமிழகத்தில் தாம்பரத்தில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர், பாரதியாரின் பிறந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாட உத்தரவிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11-ஆம் தேதி நாடுமுழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் கட்டுரைப் போட்டி நடத்தப்படும்.

இலங்கைச் சிறையில் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மீனவர்களின் நலனுக்காக கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக நீடிக்கிறது. அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...