தேசத்தையே தெய்வமாகப் பார்த்தவன் பாரதி

 புதுவையிலிருந்தபோது பாரதியும், வ.வெ.சு.ஐயரும் ஒரு நாள் பாரதமாதாவுக்கு ஒரு உருவம் தரவேண்டும் என்று எண்ணினார்கள். அப்போது ஓவியக் கலையில் சிறந்ததோர் மேதை பேத்ரீஷ் என்றொருவர் பிரெஞ்சுக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவரைச் சந்தித்து ‘இந்தியாவின் நில அமைப்பு அப்படியே பாரததேவியின் உருவாகக் காட்சியளிக்க வேண்டும். தலைமேல் ஒரு தங்க கிரீடம், தலைமுடி இரு பக்கமும் விரிந்து, இமய பர்வதத்தையும், சிந்து, கங்கை ஆறுகள் இரு மருங்கிலும் ஓடிப் பாய்வது போலவும், இலங்கையை ஒரு தாமரை போலவும் அமைத்திட வேண்டும்’ என்பது போன்ற அவரிடம் விளக்கினார்கள். அவர் ஒரு சில நாட்களில் பாரததேவியின் ஓவியத்தை எழுதி முடித்தார்.

பாரதமாதாவின் உருவ அமைப்பைப் பற்றி வ.வெ.சு.ஐயரும், பாரதியும் விவாதித்த போது ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது. வ.வெ.சு.ஐயர் பாரதமாதாவுக்கு ஆபரணங்கள் வேண்டாம், வெள்ளையன் நாட்டைக் கொள்ளை கொண்டு வறுமை நிலையில் வைத்துள்ளான் என்றார். பாரதி சிறிது நேரம் சிந்தித்து விட்டு, ‘இல்லை இல்லை, நமது நாட்டில் இன்னும் செல்வங்கள் ஏராளமாக உள்ளன. எனவே பாரதமாதா சர்வாலங்கார பூஷிதையாகவே காட்சி தர வேண்டும்’ என்றார். அதன்படி பின்னர் படத்தில் திருத்தங்கள் செய்து நகைகள் அணிவிக்கப்பட்டன.

பின் இதை மண்ணில் சிலையாக உரிய வண்ணங்களோடு வடித்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அக்காலத்தில் புதுவையில் குயவர்பாளையம் என்ற ஊரில் பொம்மைகள் செய்வதில் சிறந்த கலைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் வடித்தெடுக்கும் பொம்மைகள் எழில் மிகுந்தவை. பேத்ரீஷ் எழுதிய பாரதமாதாவின் ஓவியத்தைப் போல களிமண்ணினால் சிலையை வடித்து, வண்ணங்களைத் தீட்டிக் கொடுத்தார்கள். இந்தச் சிலையில் பாரதமாதா கால்களில் விலங்குகள் இட்ட நிலையில் காட்சியளிக்கிறாள். அவளது வலதுகரம் முகவாய்க் கட்டில் ஊன்றிய நிலையில் உள்ளது. பாரதியின் யோசனையின் பேரிலேயே இவ்வாறு செயப்பட்டது. ‘என் அன்னை சிந்தனையில் இருக்கிறாள்’ என்பதே பாரதி இதற்குக் கூறிய விளக்கம்.

நன்றி : விஜய பாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...