இந்த வெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும்

 நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் தொடரும் இந்தவெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட், காஷ்மீர் மாநிலத்தில் நடை பெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றது. ஜார்க்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்றியது. காஷ்மீரில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தவெற்றியை தமிழக பாஜகவினர் சென்னை கமலாலயத்தில் பட்டாசுவெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

இதைத்தொடர்ந்து பாஜகவின் வெற்றிகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது: பாஜக.,வின் தேசிய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல்களிலும் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு மக்கள் அங்கீகாரம் தந்து வருகிறார்கள். மற்ற மாநிலங்களில் தொடரும் இந்தவெற்றி 2016 தேர்தலில் தமிழகத்திலும் கிடைக்கும். அமித் ஷாவின் வருகை அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜக.,வின் வெற்றியை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர். கட்டாய மதமாற்ற தடைசட்டம் என்பது ஒரு விவாத பொருளாவே இருந்து வருகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றம் கூட திருமணத்துக்காக ஒருபெண் மதம் மாறுவதை ஏற்க முடியாது. இது ஒரு சமூக அவலமாக மாறிவிடும் எனக் கூறியுள்ளது.

பாஜக மதவேற்றுமையை ஏற்படுத்துவது போல் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விமர்சித்து உள்ளார். ஊழலுக்கு காரண மானவர்கள், ஊழலால் தண்டிக்கப் பட்டவர்கள் எங்களை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. நேருவின் கொள்ளு பேரன் என்ற ஒரு காரணத்துக்காக ராகுல்காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்டவர் அல்ல.

சுதந்திரத்துக்காக போராடிய அன்றைய காங்கிரஸ் வேறு. இன்றைய காங்கிரஸ் வேறு. அமித்ஷா சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவரா? என்று இளங்கோவன் கேட்கிறார். ஊழலுக்கு எதிரான இரண்டாவது சுதந்திரபோரை அமித்ஷா தலைமையில் எங்கள் கட்சி நடத்தி வருகிறது என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன். இளங்கோவன், வாசன், திருமாவளவன் ஆகியோருக்கு நான் ஒருவேண்டுகோள் வைக்கிறேன். மதத்தின் பெயரால் மக்கள் இடையே மத வேற்றுமையை ஏற்படுத்தி அரசியல் செய்யாதீர்கள். திருமாவளவன் கூறுவதுபோல் எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கவில்லை. நாங்கள் பலம்பெற்று வருவதை பொறுக்க முடியாமல் இதுமாதிரியான விமர்சனங்களை கூறி வருகிறார்கள் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...