போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும்

 போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படா விட்டால் கடும் விளைவுகளை தமிழக அரசு சந்திக்கநேரிடும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை பல்லவன் இல்ல சாலையில் அமைந்துள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை (டிச.28) நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும், 240 நாள்கள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைத்தான் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 15 மாதங்களாக தொழிலாளர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வந்த போதும், தமிழக அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை. அதனை தொடர்ந்துதான் டிசம்பர் 29-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்தனர்.

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனேபரிசீலிக்க வேண்டும். அவர்களின் வேலைநிறுத்தத்தால் போராட்டத்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பாஜக சார்பிலும் ஏற்கெனவே அறிக்கை வெளியிடப்பட்டது.ஆனால், தொழிலாளர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்து ஒரு நாள் முன்கூட்டியே, ஞாயிற்றுக்கிழமை (டிச.28) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை செய்யும்படி தமிழக அரசு தள்ளியுள்ளது.மேலும், வேலைநிறுத்தப் போராட்டம் என தொழிலாளர்கள் அறிவித்த பிறகு, பேருந்துகள் அனைத்தும் எந்தவித பாதிப்புமின்றி இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது, வேண்டுமென்றே பொதுமக்களை அலைக்கழிக்கத் திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தொழிலாளர்களின் போராட்டத்துக்கு பாஜக-வைச் சேர்ந்து பி.எம்.எஸ். தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பாஜக பொறுத்துக்கொள்ளாது. மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அளவில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அதிகாரிகள் அளவிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.எனவே, கோரிக்கைகள் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...