பிரபல மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி விரைவில் பாஜக.,வில் இணைய உள்ளார். கேரளாவில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலும் அடுத்தாண்டு மே மாதம் சட்ட சபை தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களுக்கு முன் கேரளாவில் பாஜக.,வை பலப்படுத்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் ஒருபகுதியாக திரையுலக பிரபலங்களை கட்சியில் சேர்த்து அதன்மூலம் கட்சியை பலப்படுத்த அவர் விரும்புவதாக தெரிகிறது.
இதனால் கேரளாவில் முன்னணியில் விளங்கும் சிலதிரையுலக பிரபலங்கள் விரைவில் பா.ஜ.க.வில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி பா.ஜ.க.வில் சேரப்போவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
கொல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ்கோபி, ஆரன முல்லா விமான நிலைய விவகாரம் குறித்து நான் கருத்துகளை தெரிவித் திருக்கிறேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் எனக்கு எதிராக போராட்டம் நடத்தி உருவ பொம்மை எரித்தனர். அப்போது என் நெஞ்சம் உடைந்து விட்டது. அதன் பின்னர் என்னுடைய அரசியல் பார்வையும் மாறிவிட்டது. பிரதமர் நரேந்திரமோடியின் விருப்பங்களை நிறைவேற்ற நான் விரும்புகிறேன். ஆனால் இதுதொடர்பாக கூறுவதற்கு எதுவும் இல்லை. அது குறித்து மோடிதான் தெரிவிக்க வேண்டும் என்றார். மோடியின் விருப்பங்களை நிறைவேற்றதயார் என்று சுரேஷ் கோபி கூறியிருப்பதன் மூலம் அவர் பா.ஜ.கவில் விரைவில் சேரக் கூடும் என தெரிகிறது
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.