இந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு?

இன்றைய நிலையில் இந்துக்கள் ஜாதியினால் பிரிவுபட்டிருக்கிறார்கள்.தங்களுக்கு என ஒரு சங்கம் ஆரம்பித்து அதற்க்கு ஒரு தலைவரையும் நியமித்து அவர்கள் சொல்லும் குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே செயல்படுகின்றனர்.புனித நூலான “ பகவத்கீதையில் ” பகவான் கிருஷ்ணர் சொல்கின்றார்.

“ ஜாதி என்பது பிறப்பினால் வருவது இல்லை மாறாக – அது
குணத்தினால் வருவது “ என்று.

மேலும் நான் போரிட்டால் என் ஜாதி அழிந்துவிடும் என அஞ்சும் அர்ஜூனனிடம்,கண்ணண் போரிட தூண்டுகிறான். கண்ணண் ஜாதியை ஆதரிப்பவனாக இருந்தால் போரிட தூண்டியிருக்கமாட்டான் மாறாக அவன் ஜாதியை ஓழிப்பவனாக இருக்கிறான்.ஆங்கிலேயர்கள் ஆகட்டும்,இன்றைய ஆட்சியாளர்களாகட்டும் தங்கள் பதவி சுகத்தை காப்பாற்ற நம்மை பிரித்துவைத்து வழி நடத்துகின்றனர்.இருந்தாலும் கூட நாம் கண்ணனையும், சிவனையும், இசக்கியம்மனையும், சுடலையும், வணங்குவதோடு சைவம்,வைணவம் பிரிவு பாராட்டாமல் சமம்மாகவே பாவித்து வணங்கிவருகிறோம்.

இந்து மததில் மட்டுமே ஜாதிகள் உண்டு என்று சொல்லி இந்துக்களை முஸ்லீம்களும்,கிறிஸ்தவர்களும் இந்துக்களை மதம் மாற்றி வருகின்றனர்.

கிறிஸ்தவ பிரிவினைகள்

எங்களிடம் ஜாதி இல்லை என் கூறும் கிறிஸ்தவர்களில் கேரளாவில் மட்டும் 146 பிரிவுகள் உள்ளன.பாதிரிகள் கூட தங்களுக்குள் ஜாதி வேற்றுமை பார்ப்பதாக பல செய்திகள் வெளி வருகின்றன.தங்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்கும்போது கூட தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. எறையூரில் வன்னிய கிறிஸ்தவர்களும்,ஆதி திராவிட கிறிஸ்தவர்களும் மாறி,மாறி தங்களது வீடுகளை தாக்கிக்கொண்டனர்.இதில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி ஒருவர் பலியானார்.செஞ்சி தாலுகாவில் பாதிரியை சர்சை பூட்டி திருப்பி உள்ளனர்.விழுப்புரம் தாலுகாவில் கடலூர்,பண்ருட்டி போன்ற பல இடங்களிலும் தங்கள் ஜாதியில் உள்ளவர்தான் பாதிரியாக வரவேண்டும் எனக்கூறி வந்தவர் விரட்டியடிக்கப்பட்டார்.ஆனால் கிறிஸ்தவ மிஷினரிகள் கிறிஸ்தவத்தில் ஜாதிகள் இல்லை என்கிறார்கள்.

கிறிஸ்தவத்தில் உள்ள சில பிரிவுகள்………..

லத்தீன் கத்தோலிக்க சர்ச்,
பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்,
மார்தோமா சர்ச்,
சால்வேசன் ஆப் ஆர்மி சர்ச்,
ஜெகோவா பைட்,
பெந்தகோஸ்,
இது போன்ற பிரிவுகள் 146 கேரளாவில் மட்டும் உள்ளன.

லத்தீன் கத்தோலிக்க சர்ச்சில் உள்ளவர்கள் பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள். பிரெஞ்ச கத்தோலிக்க சர்ச்சில் உள்ளவர்கள் லத்தீன் கத்தோலிக்க சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள்.இவர்கள் இரண்டு பேரும் மார்தோமா சர்ச்க்கு சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் மூன்று பேரும் பெந்தகோஸ் சர்ச் சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் நான்கு பேரும் சால்வேசன் ஆப் ஆர்மி சர்ச் சென்று ஜெபிக்கமாட்டார்கள். இவர்கள் 5 பேரும் மார்த்தோமா சர்ச்க்கு சென்று ஜெபிக்க மாட்டார்கள்.இப்படியாக ஒரே மதம்,ஒரே பைபிள், ஒரே இயேசு, என்று கற்ப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் பல்வேறு தரப்பட்ட பிரிவினைகள்.ஒரு சர்சை சார்ந்தவர்கள்,மற்ற சர்சை சார்ந்தவர்களுடன் பிராத்தனை செய்வது கிடையாது என்பது மட்டும் அல்லாமல் ஒருவரை ஒருவர் இழித்து,பழித்து பேசுவதும் தொடர்கிறது.

இஸ்லாம் பிரிவினைகள்

ஷியா,
சன்னி,
முஜாகிதீன்,
சூபி,

என 37 பிரிவுகள்.இவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொலை செய்வத் என்பது காலம் காலம்மாக தொடர்ந்து வருகின்றது.எதிர்தரப்பு முஸ்லீம்களை கொல்ல அவர்களை வெட்டி கை வலிக்கிறது என்பதற்க்காக ஒரு அறை ஒன்றை தயார் செய்து அதில் எதிர்தரப்பு முஸ்லீம்களை அடைத்து வைத்து விஷவாயுவை செலுத்தி கொல்கின்றனர்.இந்த குற்றத்துக்காகத்தான் சதாம்ஹூசைன் தூக்கிலிடப்பட்டார்.இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மற்றொரு தரப்பு அந்த அறையிலே சதாம்ஹூசைன் பிணத்தை சுற்றி கொண்டாடியது தொலைகாட்சிகளில் வெளியானது.ஈரானில் நிலவிய ஷியா,சன்னி பிரிவு மோதலை பயன்படுத்தியே ஈரானை அழித்தது அமெரிக்கா.இது மட்டும் அல்லாது தங்களுக்குள் எதிர்தரப்பு மசூதியை குண்டு வைத்து தகர்கின்றனர். குவைத்தை அமெரிக்கா ஆக்ரமித்தபோது குவைத்தில் உள்ள ஒரு பிரிவினரின் மசூதியை தாக்கி அழிக்கவேண்டும் என சுற்றியிருந்த இஸ்லாமிய நாடுகள் வேண்டுகோள் வைத்து தங்கள் நாட்டில் அமெரிக்க ராணுவபடைகளை நிறுத்த அனுமதித்தன.இதன் பயனாக குவைத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அமெரிக்கா பிரதிபலனாக குவைத்தில் உள்ள ஒரு பிரிவினரின் மசூதியை தாக்கி அழித்து தனது நன்றி சுற்றியுள்ள இஸ்லாமிய நாட்டிற்க்கு அர்ப்பணித்தது. ஒரே இறைவன்,ஒரே மறை,ஒரே மதம் என வடிவமைக்கப்பட்ட இஸ்லாம் மதம் இன்று தங்கள் சகோதரர்களை விஷவாயு செலுத்தியும்,ம்சூதியில் குண்டுகளை வைத்தும் கொன்று இஸ்லாத்தை வேடிக்கையான ஒரு பொருளாக மாற்றிவிட்டனர்.

இந்து ஒற்றுமைகள்

ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட நாயன்மார்கள்,பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட உபநிஷங்கள்,ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட விரிவுரைகள்,நாற்பதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட பிரிவுகள்,பல தரப்பட்ட மொழிகள்,பல தரப்பட்ட கலாச்சாரம் என பல்வேறாக பிரிந்திருந்தாலும் எந்த ஒரு இந்துவும் எந்த ஒரு இந்து கோவிலுக்கும் சென்று இறைவனை தரிசிக்கலாம் அதற்க்கு தடையே கிடையாது.இதுதான் ஒற்றுமை. இந்து மதத்தில் ஏனைய பிரிவுகள் இருக்கின்றன.மிகப்பெரிய பாவச்செயல் என்று வர்ணிக்கப்படும் தீண்டாமை முன்பு போல் இப்போது இந்து மதத்தில் இல்லை. ஒரு தாழ்தப்பட்டவன் கூட ஆகம விதிகளையும்,சாஸ்திரங்களையும் கற்றால் அவன் கோவில் குருக்கள் ஆகலாம் என்பது இந்துவத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்.உதாரணம்மாக கோழிக்கோடு அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த இந்து சகோதரர்களுக்கு வேத உபநிதம் பிரமாணர்களால் கற்பிக்கப்பட்டு அவர்கள் பிராமாணர்களாக ஏற்க்கப்பட்டிருக்கின்றனர். இந்துக்கள் தங்களது தெருக்களில் நடமாடக்கூடாது என்றவுடன் இந்துக்கள் எழுச்சி அடைந்தனர்.ஆனால் இந்துக்களின் எழுச்சியை அடக்க இப்பொழுது நாமெல்லாம் நாடரல்லவா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்து சகோதரர்களே கீதையை படியுங்கள்,அதனை பின்பற்றுங்கள்..நமக்குள் ஜாதிகள் வேண்டாம்.இந்து என்கிற உணர்வே போதும்.நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்.

பாரத நாடு பழம்பெரும் நாடு, நாமதன் புதல்வர் இந்நினைவகற்றோமே…….

நன்றி;- சுசிந்திரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...