பாகிஸ்தான் தனது முந்தைய செயலை தொடர்ந்தால் மோடி சகித்துக்கொள்ள மாட்டார்

 இந்தியாவில் இனிமேல் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தால், அந்நாட்டுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி போர்தொடுக்க வாய்ப்பிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ராபர்ட்பிளாக்வில் கூறினார்.

இது தொடர்பாக வாஷிங்டனில் வியாழக் கிழமை நடைபெற்ற வெளியுறவு விவகாரங்களுக்கான குழு (சிஎஃப்ஆர்) நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகப்போகிறது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் வேளையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதுகுறித்து ஒவ்வொரு பிரதமரும் யோசனை நடத்தினர். ஆனால், பிறகு அந்த யோசனையை கைவிட்டுவிட்டனர்.

ஆனால், இந்தியாவில் தற்போது ஆட்சியாளர்கள் மாறியுள்ளனர். தற்போது பிரதமராக இருப்பவர், ராணுவ நடவடிக்கையை மேற்க்கொள்ள வாய்ப்புள்ளது என்பது எனதுகருத்து.

இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று, அந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆகியவற்றுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தால், இந்தியப் பிரதமராக தற்போதிருப்பவர் (நரேந்திர மோடி), பாகிஸ்தானுக்கு எதிராக நிச்சயம் ராணுவ நடவடிக்கை எடுப்பார்.

நரேந்திர மோடிக்கு முன்பு, இந்தியப் பிரதமர்களாக இருந்தவர்களிடமும், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ராணுவம் பல்வேறு திட்டங்களை முன்வைத்தது. ஆனால், அவர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம், முந்தைய பிரதமர்களுடன் ஒப்பிடுகையில், பிரதமர் நரேந்திரமோடி, தனிப்பட்ட முறையிலும், இந்திய மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையிலும், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

அணு ஆயுத சக்திகளாக விளங்கும் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்மூளாமல் தடுக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

அதுபோல், பாகிஸ்தானும் தனது முந்தையகால செயல்பாடுகளை தொடர்ந்தால், இந்திய பிரதமர் சகித்துக்கொள்ள மாட்டார் என்பதைப் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...