சிமென்ட் நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து, விலையை உயர்த்துவதால், சாலைகள் மற்றும் நெடுஞ் சாலைகள் அமைப்பதற்கான திட்டச்செலவுகள் தாறுமாறாக எகிறியுள்ளன," என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசியதாவது: சிமென்ட் நிறுவனங்களின் உற்பத்திக்கும், விற்பனை விலைக்கும் இடையே அதிகவித்தியாசம் உள்ளது. அவை, கூட்டுசேர்ந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் லாபம் சம்பாதிக்க வேண்டியதுதான். ஆனால், அளவிற்கதிகமாக சுரண்டக்கூடாது. சிமென்ட் நிறுவனங்களின் இத்தகைய போக்கு குறித்து, பிரதமரிடம் முறையிட உள்ளேன். அரசு, சிமென்ட்சாலைகளை அமைக்கவும், அவற்றுக்கான செலவைக் குறைக்கவும் விரும்புகிறது. ஆனால், மூலப்பொருள் விலை குறைவாக இருந்தால்தான், இது சாத்தியமாகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை, சீரமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆணையத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கவேண்டும். இதற்காக, ஆணையத்தை சீரமைத்து, நவீன மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டிற்குள், 8,000 கி.மீ., நெடுஞ் சாலை திட்டங்களை செயல்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒருநாளில், சாலை அமைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இலக்கு, 3 கி.மீ., என்ற அளவில் இருந்து, 30 கி.மீ., ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.