நேரடிமானியம் வழங்கும் திட்டத்தால் அரசுக்கு பல கோடி மிச்சம்

 சமையல், 'காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடிமானியம் வழங்கும் திட்டத்தால், 10 சதவீத முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பல ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டில்லியில், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான, 'நாஸ்காம்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், பிரதமர் நரேந்திர மோதி பேசியதாவது:சமையல்காஸ் சிலிண்டர்கள் ஏற்கனவே, சந்தை விலையைவிட குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

இதில், ஏராளமான குளறுபடிகள் நடந்தன. இதை தடுப்பதற்காகவே, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக மானியதொகையை செலுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்ததிட்டம், இந்தாண்டு துவக்கத்திலிருந்து வெற்றிகரமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், 10 சதவீத முறைகேடுகளும், குளறுபடிகளும் தடுக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம்கோடி ரூபாய் அரசுக்கு
சேமிக்கப்பட்டுள்ளது. மொபைல்போன் மூலமாக நிர்வாகத்தை கையாளும் விஷயத்தில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகள், நம் நாட்டை பார்க்கும்கோணத்தை மாற்றி அமைப்பதற்கு தகவல் தொழில்நுட்ப துறையினர் உதவ வேண்டும்.

மொபைல் போன்களில் பயன் படுத்தப்படும், 'ஆப்ஸ்'சை உருவாக்க, அனைத்து தரப்பினரி டமும் ஆலோசனையை வரவேற்கிறோம். இதற்காக, My Gov என்ற இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. நான் பிரதமரானபின் சந்தித்த பெரும்பாலான வெளி நாடுகளின் தலைவர்கள், சைபர் குற்றங்கள் தொடர்பாகத்தான் கவலை தெரிவித்தனர். நம் நாட்டுக்கு மட்டு மல்லாமல், சர்வதேச நாடுகளுக்கும் சைபர் குற்றங்கள் பெரும்சவாலாக உள்ளன. நம் நாட்டில், தகவல் தொழில் நுட்ப துறையில் சிறந்து விளங்கும் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். எனவே, சைபர்குற்றங்களை தடுக்கும் வகையிலான தொழில் நுட்பத்தை நம் நாட்டு இளைஞர்கள் உருவாக்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாப்பதற்கான தொழில் நுட்பத்தை வடிவமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...