பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொலை பேசியில் பாராட்டிய பிரதமர்

 மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில், பெண்கள் பாதுகாப்புக்காக, 'நிர்பயா ரோந்துபடை' என்ற தனிப்படை உள்ளது. அதன் தலைவராக இருப்பவர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் நமீதா சாகு.

நிர்பயா ரோந்துப் படை பற்றியும் நமீதா சாகு பற்றியும் பிரதமரின் இணைய தளத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதற்கு ஒன்றரை லட்சம் பேர் 'லைக்' செய்திருந்தனர். அதைப்பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, நமீதா சாகுவை ஊக்கப்படுத்த விரும்பினார்.

அதன் படி, நமீதா சாகுவுடன் பிரதமர் மோடி தொலை பேசியில் பேசி பாராட்டினார். நம்மிடம் பிரதமர் தான் பேசுகிறாரா? யாராவது மிமிக்கிரி செய்கின்றனரா? என்று ஆச்சரியமடைந்த நமீதா, பின்னர் சுதாரித்துக் கொண்டு பயமின்றி பேசினாராம்.

அவருடைய பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, அதே வேகத்தில் அவரது பணிகள் தொடரவேண்டும் என்றும், மற்ற பெண்களுக்கும் அவர் உந்துசக்தியாக திகழவேண்டும் என்றும் தெரிவித்தாராம்.

நமீதா சாகு குடும்பத்தினரின் நலன்குறித்து விசாரித்த மோடி, தனது இ-மெயில் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அளித்து, தேவைப்படும் போது தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டாராம்.

பிரதமரே தொலைபேசியில் பேசியதால், பெண் சப்-இன்ஸ்பெக்டர் நமீதாசாகு, ஒரேநாளில் பெரும் புகழ் அடைந்து விட்டார். பேஸ்புக்கில் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. வாட்ஸ் அப்பிலும் மெசேஜ்கள் அதிகரித்துள்ளன. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் 80 சதவீத அழைப்புகள், அவரைப் பற்றியே உள்ளனவாம்!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...