மேக தூது அணைக்கட்ட மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்க வில்லை

 மேக தூது அணைக்கட்ட மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்க வில்லை என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

காவிரி ஆற்றின்குறுக்கே மேக தூது, ராசி மணல் ஆகிய இடங்களில் தடுப்பணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு விவசாய அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

சென்னையில் 21ம் தேதி நடக்கும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து அழைப்புவிடுத்து வருகின்றனர். பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கமலாலயத்தில் நேற்று சந்தித்து அழைப்புவிடுத்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர் களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

தமிழக விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு, காவிரியில் அணைகள் கட்டுவது தமிழக விவசாயிகளுக்கு விரோதமானசெயல். இதற்கு மத்திய அரசு இது வரை அனுமதி அளித்ததற்கான குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில் மத்திய அரசை குற்றம்சொல்வது நியாயமில்லை. விவசாயிகள் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக சார்பில் யார் கலந்து கொள்வது என்பதை பரிசீலித்து அறிவிப்போம். என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...