லண்டனில் பசேவேஷ்வராவின் சிலையை திறக்கும் பிரதமர்

 இந்தியாவின் 12- வது நூற்றாண்டு தத்துவ ஞானியான பசேவேஷ்வராவின் சிலை லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைக்கபட்டுள்ளது. இந்தசிலையை தனது இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் திறந்து வைக்க வேண்டும் என கோரி, சிலை அமைக்க பெரும் முயற்சி எடுத்த லண்டன் லாம்பெத் நகர முன்னாள் மேயர் நீரஜ்பாட்டீல், பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இது குறித்து பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 12வது நூற்றாண்டு தத்துவ ஞானிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சிறப்பு மரியாதையை தெரிவித்தார். பசவேஷ்வ ராவைவும் அவரது தத்துவங்களையும் பெரிதும் மதிப்பதாகவும், பிக்பென்பெல் மற்றும் பிரிட்டிஸ் பாராளுமன்றத்தின் பின்புறம் இந்த சிலையை அமைக்க திட்டஒப்புதலை பெறுவதற்கு முயற்சி எடுத்த இந்திய சமூகத் தினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் பிறந்த பசவேஷ்வரா (1134-1168) ஜனநாயகத்தின் வழிகாட்டியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழந்தார். சாதி இல்லாத சமூகத்துக்காகவும், ஜாதி மத பாரபட்சத்துக்கு எதிராக கடுமையாக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...