வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகின்றது . ஒவொரு தொகுதியிலும் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கபட்டது. இதன் படி பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள் மற்றும் வெற்றி-வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது .
மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச். ராஜா,
டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மோகன் ராஜுலு, சுகுமாரன் நம்பியார், ரமேஷ், சரவண பெருமாள், சுப.நாகராஜன், கே.என். லெட்சுமணன் ஆகியோரை கொண்ட உயர்மட்ட தேர்தல்குழு கூட்டம் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந் தேதிவரை 3 நாட்கள் நடைபெறுகிறது .
இக் கூட்டத்தில் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெறுகிறது . விருப்பமனுவும் பெறப்படுகிறது. ஒரு தொகுதிக்கு 3பேர் என்ற அளவில் வேட்பாளர் பட்டியல் தயார்செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. வருகிற 15ந்தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.