வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகின்றது . ஒவொரு தொகுதியிலும் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கபட்டது. இதன் படி பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள் மற்றும் வெற்றி-வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது .
மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச். ராஜா,
டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மோகன் ராஜுலு, சுகுமாரன் நம்பியார், ரமேஷ், சரவண பெருமாள், சுப.நாகராஜன், கே.என். லெட்சுமணன் ஆகியோரை கொண்ட உயர்மட்ட தேர்தல்குழு கூட்டம் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந் தேதிவரை 3 நாட்கள் நடைபெறுகிறது .
இக் கூட்டத்தில் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெறுகிறது . விருப்பமனுவும் பெறப்படுகிறது. ஒரு தொகுதிக்கு 3பேர் என்ற அளவில் வேட்பாளர் பட்டியல் தயார்செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. வருகிற 15ந்தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.