சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்

 வரும் 2016 ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

"பாஜக தேசிய நிர்வாகிகள், செயற்குழுக்கூட்டம் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் பெங்களூரில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார்.

கர்நாடகத்தை மையமாக வைத்து தமிழகம், ஆந்திரம், கேரளத்தில் பாஜக.,வைப் பலப் படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அடுத்த மாதம் 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைகிறது.

கடந்த 10 மாதங்களில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகள், இளைஞர்கள், தொழில் நலன்சார்ந்த திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் பிரசாரம் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

பாஜக அரசியல் கொள்கைகளை வகுத்த தீனதயாள் உபாத் யாயாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் செயல் திட்டம் வகுக்கப்படும். நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பெங்களூரில் தேசியசெயற்குழு கூடுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் முடிவுகள் வரலாற்றில் நினைவுகூரப்படும்.

ஹரியானா, மகாராஷ்டிரம், ஜம்மு- காஷ்மீர் , ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக தனது சொந்தபலத்தில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பாஜக.,வில் வலிமையான தலைவரை உருவாக்குவது தொடர்பான பணிகள் நடை பெற்று வருகின்றன.

2016ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும். தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை திருப்திகரமாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 35 லட்சம் பேர், கேரளத்தில் 20 லட்சம் பேர் பாஜக.,வில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால், அதன் பாதிப்பு வேறு மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்பதில் உண்மையில்லை.

ராஜஸ்தான், பஞ்சாப், அஸ்ஸாம், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதேபோல, பலவீனமாக உள்ள மாநிலங்களில் பாஜக வளரும்; அரசியல் ரீதியாக வெற்றி பெறும்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...