முஸ்லிம்களுக்கு எனது முழு ஆதரவு உண்டு

 முஸ்லிம்களுக்கு எனது முழு ஆதரவுஉண்டு'' என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். தில்லியில் தன்னை திங்கள் கிழமை நேரில் சந்தித்த முஸ்லிம் மதத் தலைவர்களிடம் இந்த உறுதியை பிரதமர் நரேந்திர மோடி அளித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்க பட்டிருப்பதாவது:

தில்லியில் பிரதமரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முஸ்லிம் மதத்தலைவர்கள் கொண்டகுழு சந்தித்தது. மோடியுடனான சந்திப்பின் போது, முஸ்லிம் தலைவர்கள் தங்களது மதத்தினர் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர்.

அவர்களிடம், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்துபிரிவினரும் சந்திக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண்பதற்கு தனது முழு ஆதரவு உண்டு என பிரதமர் உறுதியளித்தார். தேசத்தை கட்டமைக்கும் பணியில், முஸ்லிம் இளைஞர்கள் முக்கியப்பங்காற்ற வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

மதரஸாக்கள், மசூதிகள், வழிபாட்டு தலங்களின் சொத்துகள் தொடர்பான பிரச்னைகள்குறித்து பிரதமரின் கவனத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் எடுத்துச் சென்றனர்.

அதற்கு பிரதமர் பதிலளிக்கையில், அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். முஸ்லிம் மதத்தைச்சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு கல்வி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான வசதி செய்துதருவதற்கு அரசின் ஆதரவை பிரதமரிடம் முஸ்லிம் தலைவர்கள் கேட்டனர். அதற்கு, முஸ்லிம் மக்களின் சமூக பிரச்னைகளை சீர்செய்வதற்கும், அவர்களின் கல்வி தேவைகளை பூர்த்திசெய்வதற்கும் முழு உதவி செய்துதரப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

அதிகரிக்கும் அடிப்படை வாதம், பயங்கர வாதத்தால் எழுந்துள்ள அச்சுறுத்தலால் மக்களிடையே அச்சம் எழுந்திருப்பதாகவும், அந்தசவாலை முறியடிப்பதற்கு சிறப்பான ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் இஸ்லாமிய தலைவர்கள் குறிப்பிட்டனர். நாடு விரைவாக வளர்ச்சியடையவும், சமூக நல்லிணக்கம், அமைதியை ஊக்குவிக்கவும், நாட்டின் பாதுகாப்பை பலப் படுத்தவும் பிரதமர் மோடி கொண்டுள்ள குறிக்கோள்களை அடைவதற்கு முஸ்லிம் மக்கள் முழுஆதரவு அளிப்பார்கள் என்று தலைவர்கள் தெரிவித்தனர் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...