திருவாரூருக்கு அருகில் எமர்பேரூர் என்ற ஊரில் சிறந்த சிவபக்தரான நமிநந்தி அடிகள் வந்தார். அவரது ஊருக்கு அருகிலுள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராஜர் எழுந்தருளி வீதிவலம் வருவார்.இப்படித்தான் திருவிழாவில் தியாகராஜரைத் தரிசிக்க நமிநந்தி அடிகள் சென்றார். பக்தியோடு இறைவனை வணங்கி வீடு திரும்பினார்.
திருவிழாக் கூட்டத்தில் பல ஜாதி மக்களுடன் கலந்து நின்றதால், தீட்டு ஏற்பட்டுவிட்டது என எண்ணி, மறுநாள் காலையில் குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழையலாம் எனக் கருதி, வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கிவிட்டார்.
அப்போது இறைவன் அவரது கனவிலே தோன்றி, “அன்பனே! என்னைத் தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவரும் தூய்மையானவர்களே. அவர்களில் உயர்வு தாழ்வு பார்த்து தீட்டு ஏற்பட்டுவிட்டது என்று நீ நினைப்பது தவறு” என்று கூறி மறைத்தார்.
கண் விழித்த நமிநந்தி அடிகள் செய்த தவறை எண்ணி வருந்தினார். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்ந்த அவர், எழுந்து வீட்டில் உள்ளே சென்று பூஜையில் அமர்ந்தார்.
– நமிநந்தி அடிகள் 63 நாயன்மார்களில் ஒருவர்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.