அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்புவந்துள்ளது

 சொத்துக்குவிப்பு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்புவந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்த தீர்ப்பில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகள் நடந்த வழக்கு, இத்தனை சாட்சிகள் இதற்கு முன்னால் வந்த தீர்ப்பின்படி கடுமையான தண்டனை, பின்பு ஜாமீன், பின்பு விடுதலை. இவையெல்லாம் நடந்து வருகிறது. இவை ஒவ்வொன்றும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று ஆச்சார்யா சொல்லியிருக்கிறார். நமக்குள்ள கவலை எல்லாம் குற்றம் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது. செய்யாதவர்கள் தண்டனை அடைந்து விடக் கூடாது என்பதே முறையான நீதியின் தன்மையாக இருக்க வேண்டும்.

நடந்தது ஊழல் வழக்கு, வழக்கமாக தமிழகத்தில் ஊழலும் நடந்து வருகிறது என்பதற்கு ஒவ்வொரு துறையிலும் இன்று வெளியாகும் தகவல்கள் நமக்கு உணர்த்துகிறது. இந்தத் தவறுகள் எங்கே நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து தவறுகள் களையப்பட்டு ஊழல் வழக்கில் தலை குனிந்த தமிழகம் இனிமேலாவது ஊழல் ஒழிப்பில் முதன்மை பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.

வழக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால் வழக்கமாக தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய தேவைகளும், சேவைகளும் கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இந்தத் தீர்ப்பில் மட்டுமல்ல எந்தத் தீர்ப்பிலும் பாரதிய ஜனதா கட்சியின் தலையீடு இல்லை என்பதை மக்;களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னைப் போறுத்த வரையில் மக்கள் முதல்வர் இதற்கு முன்னால் எப்படி இருந்தாரோ இறைவனின் அருளால் நீதி மன்றம் ஓர் மிகப் பெரிய நிம்மதியை அவர்களுக்கு அளித்திருக்கிறது. அந்த நிம்மதி தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை ஜெயலலிதா அவர்கள்; உறுதி செய்ய வேண்டும் என்பது மக்கள் நலன் கருதி எனது கோரிக்கையாக இருக்கிறது.
இப்படிக்கு

என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...