உச்சத்தை எட்டியது ஆளுநர் முதல்வர் அதிகார மோதல்

 அதிகாரிகள் நியமனவிவகாரத்தில் தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் இடையேயான அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

பரஸ்பர குற்றச் சாட்டை சுமத்திய இருவரையும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க் கிழமை கண்டித்தபிறகும், இந்த அதிகாரமோதல் முடிவுக்கு வரவில்லை.

இந்தநிலையில், கடந்த ஒருவாரத்தில் தனது ஒப்புதலின்றி தில்லி அரசு பிறப்பித்த அனைத்து உயரதிகாரிகள் பணியிட மாற்றல், நியமன உத்தரவுகளை துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங் புதன் கிழமை ரத்துசெய்தார்.
இதையடுத்து, "தில்லியில் சுதந்திரமாக ஆட்சிநடத்த ஒத்துழையுங்கள்' என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதினார். இந்தமோதல் தொடருவதால் பெரும்பாலான அதிகாரிகள், தில்லி அரசில்தொடர்ந்து நீடிக்க விருப்பமின்றி மத்திய அரசுப்பணிக்கு மாற்றலாக விருப்பம்தெரிவித்து, மத்திய பணியாளர் நலத்துறையிடம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், தில்லி அரசியல்மட்டுமன்றி, அரசின் நிர்வாகத்திலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...