பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது

 ஆர்கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் முடிந்தவுடன், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர்ஆண்டு சாதனை விளக்கக்கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தகூட்டத்தில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சி பாஜக.வின் நிகழ்ச்சி அல்ல. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளை அறிக்கையாக பொது மக்கள் முன்பு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகும். ஊடகங்கள் எல்லாம் மோடியின் ஆட்சி, தொழிலதிபர்களுக்கு ஆதரவான ஆட்சி என்று விமர்ச்சிக்கின்றன. தொழில்வளர்ச்சி, நிதிவளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவைதான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதற்கு முந்தைய ஆட்சியில் நிர்வாக திறமைகொண்ட தலைமை இல்லை. இதனால், அரசுமீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்திய தொழிலதிபர்கள் எல்லாரும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். ஊழல் ஒட்டுமொத்த அரசு எந்திரத்தை சீர்குலைத்து விட்டது. இலங்கை, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லஉறவு இல்லை. நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தபின்னர், இவற்றை எல்லாம் சரி செய்தார். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 16 அணுஉலைகளை உருவாக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு யுரேனியத்தை வழங்க கனடாவும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை இந்தியாவில் முதலீடுசெய்ய சீனாவும் முன்வந்துள்ளது. இந்தியாவில் முதலீடுகளை செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

நரேந்திரமோடி ஆட்சிக்குவந்த பின்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேவேகத்தில் இந்தியா முன்னேறினால், 3 அல்லது 4 ஆண்டுகளில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும் என்று உலகவங்கியே கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், நிலம் கையகப் படுத்தும் சட்டம் அமலுக்கு வந்தால், பொதுமக்கள் நிலம் எல்லாம் பறிபோகும் என்றும் அந்தநிலங்கள் எல்லாம் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்று தவறான தகவல் பரப்புகின்றனர். அப்படி ஒரு எண்ணம் மத்தியரசுக்கு கிடையாது என்று உறுதியளிக்கிறேன்.

தற்போது சென்னையில் மெட்ரோரெயில் திட்டத்தின் முதல் கட்டப்பணி முடிவடைந்து விட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதால், சென்னையில் தேர்தல் நடத்தை விதி அமலில்உள்ளது. எனவே, இடைத்தேர்தல் முடிந்ததும், மெட்ரோரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும். விரைவில் மெட்ரோரெயில் சென்னையில் ஒரு பகுதியில் ஓடத் தொடங்கும் இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.