பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி சென்னையில் ஆர்பாட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் வட பழனி 100 அடிசாலை சந்திப்பு அருகில் உள்ள டாஸ்மாக் கடை உள்பட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பச்சிளம் பாலகர்கள்கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் ஒருசில இலவசங்களுக்காக இல்லத் தரசிகளின் தாலி காவு வாங்கப்படுகிறது , தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை மூட வேண்டும் மதுவால் கிடைக்கும் வருமானத்தை வேறு வழியில் ஈட்ட அரசு முற்பட வேண்டும். பல இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பள்ளி அருகில் இருப்பது வருத்தமளிக்கிறது.
தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் தமிழக முழுவதும் பாஜக மகளிரணி திரண்டு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் என்றார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த டாஸ்டாக் கடைக்கு தமிழிசை பூட்டுபோட முயன்றார். அவரை காவல் துறையினர் கைதுசெய்து வேனில் ஏற்றினர். இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.