சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்பினார்

 ரஷியா, மத்திய ஆசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை இரவு நாடு திரும்பினார்.

தில்லி வந்த பிறகு, இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய ஆசிய பிராந்திய நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்து வதற்காக மத்திய ஆசியாவில் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை முடித்து விட்டு, நாடு திரும்பி யுள்ளேன்.

இந்தியா, மத்திய ஆசிய நாடுகள் இடையே வலுவான நட்புறவு நிலவுவது, இப்பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளின் எதிர் கால நலனுக்கு முக்கியமானதாகும் என அந்தபதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷியா, துர்க்மீனிஸ்தான், கிர் கிஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் சுற்றுப் பயணம் செய்தார்.

ரஷியாவில் மேற்கொண்ட பயணத்தின் போது, அந்நாட்டின் உஃபா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பு உச்சிமாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு ஆகியவைகளில் பங்கேற்றார். அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மீனிஸ் தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின்போது அந்நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...