ரதயாத்திரையை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து

 குஜராத் ரதயாத்திரையை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துதெரிவித்தார். இது தொடர்பாக, அவர் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்டபதிவில் கூறியிருப்பதாவது:

குஜராத்தில் நடைபெறும் பகவான் ஜெகந் நாதரின் 138-வது ரதயாத்திரை குறித்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் ஜெகந்நாதரின் அருளால் சமுதாயத்தில் அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவட்டும். அவருடைய கிருபையால் ஏழைமக்களும், விவசாயிகளும் சுபிட்சமடையட்டும்.

ரதயாத்திரை போன்ற பாரம்பரிய நிகழ்ச்சியானது, இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தற்போது, இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது.

குஜராத் முதல்வராக நான் இருந்த போது, பகவான் ஜெகந் நாதரின் ரதம் பயணிக்கும் சாலையை சுத்தப்படுத்தும் "பாஹிந்த் வீதி' என்னும் சடங்கு நிகழ்ச்சியில் 12 ஆண்டுகள் பங்கேற்றேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்ற ரத யாத்திரையின் "பாஹிந்த் வீதி' நிகழ்ச்சியில் தாம் பங்கேற்ற புகைப்படங்களையும் அந்தப்பதிவில் மோடி வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...