திக்விஜய்சிங், பிறவியிலேயே சதி குணங்களுடன் பிறந்த சதிகாரர்

 மத்தியப் பிரதேசம் மாநில தேர்வுவாரியமான 'வியாபம்' ஊழல் தொடர்பான சர்ச்சைகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டதொடரை நிலைகுலைத்து வரும்வேளையில் இந்த ஊழலை ஆயுதமாக கையில் ஏந்திபோராடிவரும் காங்கிரஸ் கட்சிமீது மத்தியப் பிரதேசம் மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பகிரங்க தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளார்.

வியாபம் ஊழல் தொடர்பான ஊழல் விசாரணை சிபிஐ.க்கு மாற்றப்பட்ட பின்னர் முதன் முறையாக நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவராஜ்சிங் சவுகான், மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் மீது நேரடியாகவே வார்த்தைகளால் நெருப்புமழை பொழிந்தார்.

சாதாரண விவசாயியின் மகனான நான் இந்தமாநிலத்தின் முதல் மந்திரியாக இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்க வில்லை. அதனால், என்னை பதவியில் இருந்து இறக்க காங்கிரசார் சதிசெய்து வருகின்றனர்.

அரசு பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க 'வியாபம்' முறையை அறிமுகப் படுத்தினோம். அதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்ததையடுத்து, சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்து, விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.

ஆனால், இதைபற்றி எல்லாம் கவலைப்படாத காங்கிரசார் என்னை பதவியைவிட்டு இறக்குவதிலேயே குறியாக கங்கனம்கட்டி போராடி வருகின்றனர். நான் பதவியைவிட்டு விலக வேண்டுமா? என்பதை மக்களாகிய நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் எப்போதுமே மற்றவர்களின் அடி வயிற்றின்மீது எட்டி உதைக்கும் கெட்டப்பழக்கம் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக, திக்விஜய்சிங், பிறவியிலேயே சதி குணங்களுடன் பிறந்த சதிகாரர் என்று சிவராஜ்சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...