பீகார் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் ; கருத்து கணிப்பு

 பீகார் சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டனி 126 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடேவின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 12-ந்தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி, மாஞ்சியின் இந்துஸ் தான் அவாமி மோர்ச்சா, மத்திய அமைச்சர் உபேந்திர குஷாவாவின் ஆர்.எல்.எஸ்.பி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த அணியில் இன்னமும் தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வரவில்லை. அதேபோல் யார் முதல்வர் வேட்பாளர் என்பதையும் பாஜக. அணி அறிவிக்க வில்லை. முதல்வர் நிதிஷ் குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்தியாடுடே (India Today Group- Cicero) குழுமம், பீகாரில் தேர்தலுக்கு முந்தைய நிலைமை தொடர்பாக கருத்துகணிப்பை ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட் டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் விவரம்: இந்த கருத்துகணிப்பு 81 தொகுதிகளில் 5,968 பேரிடம் செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 125 இடங்களை பாஜக. அணிவெல்லும். நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு 106 இடங்கள் கிடைக்கும். பீகாரில் ஆட்சி அமைப்பதற்கு தேவை 122 இடங்கள்.

பீகார் தேர்தலில் முதன்மை பிரச்சனை ஊழல்தான் என 22%; அரிசி விலை உயர்வுதான் என 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி மொத்தம் 206 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. லாலு-பாஸ்வான் கூட்டணி வெறும் 25 இடங்களைத் தான் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...