நேரடி மானியத்தால் 30 விழுக்காடு மானியம் சேமிப்பு

 சமையல் எரி வாயு திட்டத்திற்கான நேரடி மானியத்தால், மத்தியஅரசுக்கு 30 விழுக்காடு மானியம் சேமிக்கப் பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மக்களை மையப் படுத்தி ஆட்சி என்ற தலைப்பில் டெல்லியில் நடத்தபட்ட கருத்தரங்கின் நிறைவுவிழாவில் பேசிய அருண்ஜெட்லி, சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தின் மூலம், ஆயிரக் கணக்கான போலி இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசுத்துறைகளில் இருக்கும் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் , அதற்கு ஆதாரமாக விமானத் துறையை சுட்டிக்காட்டினார். இந்திய விமானத் துறையில் அரசின் ஏகபோகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபிறகு, அந்த துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெட்லி தெரிவித்தார்.

ரயில்வே துறையில் அரசின் ஏகபோகம் முடிவுக்கு வராததால், அது போன்ற மாற்றம் நிகழவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஆதாயம் பார்க்க துடிக்கும் அரசியல்வாதிகளின் மனோபாவம் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை என்றும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...