இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்துவது என்ற முடிவு சரியே

 மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரது தபால் தலைகளை நிறுத்துவது என்று எடுத்தமுடிவு சரியானது தான் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

நமது நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் தபால்தலைகள் இருக்க வேண்டும். ஒருகுடும்ப உறுப்பினர்களை மட்டும் கௌரவிக்கும் வகையில் இருக்கக்கூடாது. தபால்தலைகள் தொடர்பான அறிவுரைக்குழு அளித்த பரிந்துரைப்படி, ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபபாய் படேல், சிவாஜி, மௌலானா ஆசாத், பகத்சிங், ஜெய பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, விவேகானந்தர், மகா ராணா பிரதாப் ஆகியோரின் தபால் தலைகளை வெளியிட முடிவு செய்யபட்டுள்ளது.

தபால் தலைகள் வெளியிடுவது தொடர்பான வரிசையில், ஒருகுடும்பத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது தவிர, மற்றவர்களின் பெயர்களும் அந்த வரிசையில் உள்ளன. மகாத்மா காந்தி, மௌலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் பாபா ஆகியோரின் பெயர்களும் உள்ளன. ஆனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரிசையில், நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட ஜவாஹர்லால் நேரு உள்பட அனைத்து முக்கிய தலைவர்களும் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் நாங்கள் மிகவும் பரந்த மனதுடன் உள்ளோம். வேறு பட்ட சித்தாந்தம், அணுகு முறைகளைக் கொண்டவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம். அவர்கள் அனைவரும், நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...