முத்ரா திட்டம் குறித்த விழிப் புணர்வு வாரத்தை அருண்ஜெட்லி இன்று தொடங்குகிறார்

 சிறு தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் எளிதாக கடன்பெறும் முத்ரா திட்டம் குறித்த விழிப் புணர்வு வாரத்தை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று தொடங்குகிறார்.

டெல்லியில் பஞ்சாப்நேஷனல் வங்கியின் சார்பில் நடைபெறும் முகாமில் தொழில் முனைவோர் சிலருக்கு கடனுக்கான கடிதத்தை ஜெட்லி வழங்க உள்ளார். நாடுமுழுவதும் சிறுதொழில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், முத்ராகடன் விழிப்புணர்வு வாரம் இன்று முதல் அக்டோபர் 2ம் தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது.

வங்கிகள் சார்பில் முத்ராகடன் திட்ட பரப்புரை முகாம்கள் நடை பெறவுள்ளன. நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் ஒருலட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் சிறு கடன் வழங்க பொதுத்துறை, தனியார் மற்றும் மண்டல கிராமவங்கிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. சிறு தொழில் வளர்ச்சி வங்கியான Sidbiயின் துணை அமைப்பாக முத்ரா நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் ஆரம்ப முதலீடாக 5 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

அதன் மூலமாக வங்கிகள் சிறுதொழில் முனைவோருக்கு அதிகபட்சம் 10 லட்ச ரூபாய்வரை கடன் வழங்கவுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...