சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 7 கோடியாக உயர்த்தவேண்டும்

 நவீன உள்கட்டமைப்பு வசதிக ளுடனும், குறைந்த செலவில் சுற்றுலாசெல்ல ஏதுவான நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வலியுறுத்தினார்.

நாட்டில் ஆண்டுக்கு 70 லட்சமாக உள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 7 கோடியாக உயர்த்தவேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஜன சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தீன தயாள் உபாத்யாயவின் நினைவாக, தில்லியில் ரூ.125 கோடியில் சுற்றுலா இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தவிழாவில் கலந்து கொண்டு அருண்ஜேட்லி பேசியதாவது:

இந்தியாவுக்கு ஆண்டு தோறும் 7 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மகேஷ்சர்மாவை கேட்டுக்கொள்கிறேன்.

எந்தெந்த நாடுகளில் இருந்து மிக அதிகமான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்களோ, அந்த நாடுகளில் சுற்றுலாமேம்பாட்டு அலுவலகங்களைத் திறக்கவேண்டும்.

சுற்றுலாத்துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் நோக்கில் விமான நிலையங்களை மத்திய அரசு நவீன மயமாக்கி வருகிறது. மேலும், ரயில்வே, நெடுஞ்சாலை போக்குவரத்து வசதிகளும் நவீனமாக மாற்றப்படுகின்றன. இந்தியாவுக்கு மிக, மிக அதிகமான விமானங்கள் வந்தால் தான் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரமுடியும். எனவே, விமான சேவையை 5 முதல் 10 மடங்குவரை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதேபோல், கப்பல் போக்கு வரத்தையும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், குறைந்தசெலவில் கிடைக்க கூடிய தங்கும் விடுதிகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டு வரும் வெளிநாட்டு பயணங்களின் பலனாக, சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்களதுதொழிலை விரிவுபடுத்த முன் வந்துள்ளன என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...