நிலம் இல்லாதவர்கள் வீடுகட்ட இலவச நிலம்

 பீகார் சட்ட சபை தேர்தல் வரும் 12–ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜனதா கூட்டணிக்கும், ஆளும் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆட்சியைக் கைப்பற்ற இரு தரப்பினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று 8 மத்திய மந்திரிகளுடன் பீகார் சென்றார். பாஜக. பிரசாரத்தில் ஏற்பட்டுள்ள தொய்வுபற்றி கவலைதெரிவித்த அமித்ஷா, அதை ஈடுகட்ட புதிய வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருபதாவது:–

நிலம் இல்லாதவர்கள் வீடுகட்ட இலவசமாக நிலம் வழங்கப்படும். அந்த நிலத்தில் சொந்த வீடுகட்டிக் கொள்ள ஒவ்வொருவருக்கும் அரசு தேவையான உதவிகள் செய்யும்.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் மிகச்சிறப்பான மதிப்பெண் பெறும் 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். சிறப்பாக படிக்கும் 5 ஆயிரம் மாணவிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள் வழங்கப்படும்.

கல்வி கடன்கள் 3 சதவீத வட்டியுடன் அளிக்கப்படும். 2022–ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கபட்ட குடி நீர், மின்சாரம் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மாணவ–மாணவிகள் வெளிநாடு சென்று படிக்க தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு இணையத் தளத்தை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும் இவ்வாறு பாஜக. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...