பான்கார்டை கட்டாயமாக்க வேண்டும்

 குறிப்பிட்ட அளவுக்குமேல் பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு பான்கார்டை (நிரந்தர கணக்கு எண்) கட்டாயமாக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- வருமான வரித் துறையை வலிமையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக விரைவில், குறிப்பிட்ட அளவுக்குமேல் பண பரிவர்த்தனைகள் செய்தால் பான்கார்டு கட்டாயம் என்ற விதி அமல் படுத்தப்படும். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய அளவிளான கருப்புபணம் இந்தியாவிலேயே உள்ளது. பிளாஸ்டிக் மின்னுணு அட்டைகளை பயன் படுத்துவதை கட்டாயமாகவும், ரொக்கமாக பண பரிவர்த்தனைகள் செய்வதை விதி விலக்காவும் மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கணக்கில் வராதாபணத்தை வெளிக்கொணரவும் வரிவிகிதங்களை நியாயமான முறையில் மேற்கொள்ளவும் அரசு கடமைப்பட்டுள்ளது.

அரசு அளித்த ஒற்றைச் சாளர சலுகையைப் பயன்படுத்தி, கருப்புப் பணம் குறித்து தகவல் அளித்தவர்கள், கருப்புப் பணத் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் நிம்மதியாக தூங்கலாம்.

ஆனால், வெளிநாடுகளில் தாங்கள் பதுக்கியுள்ள கருப்புப்பணம் குறித்து தகவல் அளிக்காதவர்கள் சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்கள். தாங்கள் பதுக்கியுள்ள கருப்புப்பணத்தின் அளவில் 30 சதவீத வரியும், 90 சதவீத அபராதமும் செலுத்தநேரிடும்.

அத்துடன், கருப்புப்பணம் பதுக்கியவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கு கருப்பு பணம் பறந்துசெல்வது கருப்புப் பணத் தடுப்புச்சட்டத்தின் கீழ் இனி தடுக்கப்படும் என்றார் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...