அம்பேத்கர் நினைவ கத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்

 மும்பையில் அம்பேத்கர் நினைவ கத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அந்த இடத்தில் 150 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.

மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புகழகத்தில் 4–வது டெர்மினலுக்கு அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மும்பை வந்தார்.

தாதர் இந்து மில் வளாகத்தில் அம்பேத்கர் நினைவக அடிக்கல் நாட்டுவிழாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கும் பிரமாண்ட அம்பேத்கர் நினை வகத்துக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் தற்போதைய பா.,ஜனதா ஆட்சியிலேயே முடிவடைந்து, பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் அமைய இருக்கும் இந்நினை வகத்தில் அம்பேத்கர்கருக்கு 150 அடி உயரத்தில் சிலை அமைக்கபடுகிறது. மேலும், இந்தசிலைக்கு அருகாமையில் 140 அடி உயரம் மற்றும் 110 மீட்டர் சுற்றளவில் ‘ஸ்தூபி’ எழுப்பப் படுகிறது. தவிர, அம்பேத்கர் நினைவக கட்டமைப்பை முழுமையாக மூடும்வண்ணம் அசோகசக்கரம் ஒன்றும் பொருத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, ஒரேநேரத்தில் 13 ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்யும் பொருட்டு, தியான அறையும் கட்டப் படுகிறது. ஒட்டுமொத்தத்தில், இந்த நினைவகம் சுமார் 7.4 ஹெக்டேர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக அமைகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...