டைம் பத்திரிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் தலைமை அதிகாரி சுந்தர்பிச்சை ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'டைம்' பத்திரிகை ஆண்டு தோறும் உலகின் சிறந்தமனிதரை தேர்வுசெய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதர் யார் என்பது டிசம்பரில் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்தமனிதரை தேர்வுசெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தபட்டியலில் இந்தியாவை சேர்ந்த பிரதமர் நரேந்திரமோடி, தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனப் படுத்தவும், அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும்,மோடி முயற்சிப்பதாக டைம் தெரிவித்துள்ளது.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.