தமிழகத்தில் பாஜக. தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மது விலக்கு

 தமிழகத்தில் பாஜக. தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மது விலக்கு அமல் படுத்தப்படும் என்று தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாத புரத்தில் தேவேந்திரர் தன்னார்வ அறக் கட்டளை நடத்திய மதுரை பிரகடனம் குறித்த விளக்க கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர ராவ் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மது, ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் எதிரொலிக்கும். அதனை முன்னிறுத்தி தான் பாஜகாவின் தேர்தல்பிரசாரம் இருக்கும்.
 
தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மது விலக்கு கொண்டு வரப்படும். மதுவால் கிடைக்கும் வருமானத்தில் தான் திமுகவும், அதிமுகவும் தங்களது கட்சிகளை நடத்தி கொண்டிருக்கின்றன. பாமகவும், தேமுதி.,கவும் இப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கின்றன. மதிமுக பொதுச்செயலர் வைகோ மட்டும்தான் கூட்டணியில் இல்லை எனத்தெரிவித்து வெளியேறி விட்டார்.

பாரதிய ஜனதா கட்சியில் சமூக அக்கரைகொண்ட பலகட்சிகள் இணைய ஆர்வமாக உள்ளன.தமிழக மீனவர்களின் பல ஆண்டுகால பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண மாற்றுத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என முரளிதர ராவ் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...