இஷ்ரத்ஜகான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதி

குஜராத் என்க வுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவி இஷ்ரத்ஜகான், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதிதான் என்று மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்ற வாளிகளில் ஒருவரான டேவிஹெட்லி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2006ஆம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் குஜராத்போலீசாரால் அகமதாபாத் புறநகரில் சுட்டுக் கொல்லப் பட்டார். குஜராத் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்ததால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால் இது போலி என் கவுண்ட்டர் என்று போலி மதச் சார்பின்மையினரும்  மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த என் கவுண்ட்டர் வழக்கில்தான் தற்போதைய பா.ஜ.க. தலைவர  அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டிருந்தார்.

அதேபோல் காவல் துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் பலரும் இந்தவழக்கில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா சிறையில் உள்ள மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்ற வாளிகளில் ஒருவரான ஹெட்லியிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணைநடத்தி இருந்தனர். அந்த விசாரணையின் போது இஷ்ரத் ஜகான், லஷ்கர் இதொயா இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி என ஹெட்லி உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஹெட்லி அண்மையில் மும்பை நீதி மன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகி அப்ரூவரானார். அவருக்கு நீதிமன்றம் மன்னிப்புவழங்கி சாட்சியமாக்கி உள்ளது. இனி ஹெட்லியிடம் நடத்தபடும் விசாரணையில் இஷ்ரத்ஜகான் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...