பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை

பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விரும்புகிறது

அண்டை நாடான பாகிஸ்தானுடன் பரஸ்பர நல்லுறவையும், நம்பிக்கையையும் பேணவேண்டும் என்று இந்தியா எப்போதும் விரும்புகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வதுதான் சிறந்தவழி என்று மத்திய அரசு கருதுகிறது.

அந்த அடிப்படையில் தான், கடந்த ஆண்டு மே மாதம் 26–ந்தேதி நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்புவிழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைக்கப்பட்டார். அதன்பிறகு ரஷியாவில் உள்ள உபா நகரில் பிரதமர் மோடியும், நவாஸ்ஷெரீப்பும் சந்தித்து பேசினார்கள். கடந்த நவம்பர் 30–ந்தேதி பாரீஸ் நகரில் நடைபெற்ற உலக பருவ நிலை உச்சிமாநாட்டின் போதும் அவர்களுடைய சந்திப்பு நடந்தது.

அதன்பிறகு தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் சந்தித்து தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாகத் தான், சமீபத்தில் இஸ்லாமாபாத் சென்றிருந்த நான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும், வெளியுறவுமந்திரி சர்தாஜ் அஜீசையும் சந்தித்துபேசினேன்.

இந்த பிராந்தியத்தில் அமைதியும், நிலைத் தன்மையும் நிலவ அண்டை நாட்டுடன் சுமுகமான நல்லுறவை பேணுவது அவசியம் ஆகும். நல்லுறவை மேம்படுத்துவதற்கு இடையூறாக சிலஅம்சங்கள் (தீவிரவாத குழுக்கள்) இருந்தபோதிலும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இருநாடுகளும் விரிவான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும் என்று இரு தரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ள அம்சங்கள் நீக்கப்பட வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புகின்றன.

இந்தியாவுடன் உறவை மேம்படுத்து வதற்கான முயற்சியை பாகிஸ்தான் தொடங்கி இருக்கிறது. இந்தியாவும் அதையேவிரும்புகிறது. இதற்கு பாராளுமன்றம் ஆதரவு அளிக்கவேண்டும் இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

 பாகிஸ்தான் தலைவர்களை தான் சந்தித்துபேசியது தொடர்பாக மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...