பாதிக்கப்பட்டோர் எல்லா வகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்

வெள்ளம்பாதித்த பகுதிகளில் தனியார் மருத்துவ மனைகளில் ஒருமாதத்துக்கு தனிப் பிரிவுகளை அமைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கை:

 மழைவெள்ளத்தில் இருந்து சென்னை மெதுவாக மீண்டுவருகிறது. அரசுடன் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பெருமளவு பங்கெடுத்துக கொண்டன.  நிதியாக கொடுப்பவர்கள் பொதுநிவாரண நிதியாக அளித்து விடுகின்றனர்.

 அதேசமயம், ஏதாவது மக்கள் நலத்திட்டங்கள் செய்ய நினைத்தாலோ அதற்கு ஒருவழிகாட்டுதல் இருந்தால் நலமாக இருக்கும். அதிகம்பாதித்த சென்னையின் புறநகர்ப் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்ட இடங்களாகவே விளங்குகின்றன. அத்தனை தனியார் மருத்துவ மனைகளும் வெள்ளம் பாதித்த மக்களுக்கான தனிப்பிரிவுகளை ஒரு மாதத்துக்கு அமைக்க வேண்டும்.

 வீட்டு உபயோக பொருள்களை இழந்தவர்களுக்கு, அந்த பொருள்களை லாபம் இல்லாமல் கொடுக்க முயல்வதோடு, தங்கள் நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை திரும்ப பெற்று குறிப்பிட்ட குறைந்த விலையில் புதுப் பொருள்களை வழங்கலாம். பாதிக்கப்பட்டோர் எல்லா வகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...