-பாகிஸ்தான் நல்லுறவு வலுபெற வாஜ்பாய் வழியில் மோடியும் செல்லவேண்டும்

இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு வலுபெற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் மோடியும் செல்லவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி  ஆப்கான் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து டெல்லி திரும்ப இருந்த நிலையில், திடீரென தனது பயணத் திட்டத்தை மாற்றி பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்தார். இந்த திடீர்பயணம் மற்றும் சந்திப்பினை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற் றுள்ளன. ஐ.நா. சபையும் வரவேற்றுள்ளது.
 

மோடியின் இந்த திடீர் பயணத்தினை பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்று பாராட்டி யுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

பிரதமர் மோடியின் திடீர்  பயணம் வரவேற்கதக்கது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை பேணும்வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்த முயற்சியை மோடி முன்னெடுத்து செல்லவேண்டும். வாஜ்பாய் வழியில் நாட்டை மோடியும் மற்றவர்களும் வழி நடத்திச்செல்ல வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார். மோடியின் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்றுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், இதுபோன்ற முயற்சிகள், அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மேம்படுத்த விரும்புவது தொடர்பான நம்பிக் கையான செய்தியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு புறம் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், எதிர்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...