இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு வலுபெற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் மோடியும் செல்லவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் திடீர் பயணம் வரவேற்கதக்கது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை பேணும்வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்த முயற்சியை மோடி முன்னெடுத்து செல்லவேண்டும். வாஜ்பாய் வழியில் நாட்டை மோடியும் மற்றவர்களும் வழி நடத்திச்செல்ல வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார். மோடியின் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்றுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், இதுபோன்ற முயற்சிகள், அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மேம்படுத்த விரும்புவது தொடர்பான நம்பிக் கையான செய்தியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு புறம் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், எதிர்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.