இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும் போது, ''ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கதேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்.
நவீன நகரங்கள் திட்டத்துக்கான விவரங்களை கடந்த டிசம்பர் 15-க்குள் மத்தியஅரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதுகுறித்து எந்த விவரத்தையும் அனுப் பவில்லை. தமிழகத்துக்கு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவேண்டும்.
தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் செய்தியாளர்களிடம் நடந்துகொண்ட விதத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஜனநாயகத்தின் அங்கமாகும். ஏனெனில் செய்தியா ளர்களின் வழியாகவே மக்களுக்கு செய்தி சென்றுசேர்கிறது. விஜயகாந்தின் நல்ல செயல்கள் பாராட்டும் அதே நேரத்தில் சிலதவறுகளை சுட்டிக்காட்டவும் பாஜக தயங்கியதில்லை'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.