தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே பேச்சுவார்த்தை

பஞ்சாப்பின் பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம், இந்தியா வழங்கி யுள்ளது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே வெளியுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட ஆதாரத்தில், பதன் கோட் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் குறித்தும், அவர்கள், பாகிஸ்தானில் உள்ள வர்களுடன் பேசிய உரை யாடல்களை உளவுத் துறையினர் பதிவு செய்த ஆதாரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா ஆதாரங்கள் வழங்கியுள்ளதை பாகிஸ்தான் அரசும் உறுதிசெய்துள்ளது.

மேலும் பதன்கோட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, இந்த தாக்குதல்தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்பில் உள்ளதாகவும், இந்தியா வழங்கிய தகவல்களை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிகூறியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்கள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவது என மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பதன்கோட் தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைளை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் பழிக்குபழி வாங்குவோம் என சூளுரைத்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அமைதியாக இருக்காது என்றும், அந்நாட்டுக்கு இந்தியாவின் சார்பில் உரியபதிலடி கொடுக்கப்படும் எனவும் நிதின் கட்காரி எச்சரித்துதுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...