கல்யாண ராமன் விமர்சனம் மட்டும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதா?

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாஜக., பிரமுகர் கல்யாணராமனை, கட்சித் தலைவர்கள் நேற்று சந்தித்தனர்.'பேஸ்புக்' சமூக வலை தளத்தில் குறிப்பிட்ட மதத்தவருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டார் எனக்கூறி, கல்யாணராமனை, தமிழக போலீசார் கைதுசெய்து, சென்னை புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர். கட்சி சார்பில் அவரை சந்திப்பதற்காக நேற்று, தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், புழல்சிறைக்கு சென்றார்.

கல்யாணராமனை சந்தித்து பேசியபின், அவர் அளித்த பேட்டி: பேஸ்புக்கில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை, விமர் சனங்களை சுதந்திரமாக பதிவுசெய்து வருகின்றனர். அந்த அடிப்படையில்தான் கல்யாண ராமனும், சிலகருத்துகளை பதிவிட்டிருக்கிறார். அதை குற்றமாக கருதி, போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது தவறு.

'பேஸ்புக்பதிவை, குற்றமாக கருதக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. ஹிந்துகடவுளை, யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; எந்த நடவடிக்கையும் கிடையாது.

கேட்டால், கருத்துசுதந்திரம் என சொல்வர். ஆனால், கல்யாண ராமன் விமர்சனம் மட்டும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாக கருதப் படுகிறது. கருத்து சுதந்திரத்திற்குகூட மதச்சாயம் பூசப்படுகிறது.
அதையெல்லாம் கண்டுகொள்ளாத போலீசார், கல்யாண ராமனை மட்டும் உடனே கைதுசெய்துள்ளனர். பாரபட்சமாக போலீசார் நடந்து கொள்வது

எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.எந்த அறிவிப்பும் இல்லாமல், விருகம் பாக்கத்தைச் சேர்ந்த, 24 பேரை, கைது செய்து புழல்சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மனைவிமார்கள், பரிதாபமாக ஜெயில்முன் கூடியிருக்கின்றனர். தமிழக போலீசின் செயல்பாடு இப்படிதான் உள்ளது.

மதுரையில், அமைச்சர் அலுவலகத்திலேயே வெடிகுண்டு வீசப்படுகிறது; தமிழக சட்டம் – ஒழுங்கு இப்படிதான் உள்ளது. இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...