குளச்சல் பணிகளுக்கான டெண்டர், மார்ச் மாதத்துக்குள் வெளியிடப் படும்

மும்பையில், தொழில் துறை கூட்டம் ஒன்றில், மத்திய கப்பல், சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் குளச்சல், மராட்டியத்தில் வாத்வான், மேற்கு வங்கத்தில் சாகர் ஆகிய 3 புதிய துறைமுக பணிகளுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம்கோடி முதல் 20 ஆயிரம் கோடி வரை முதலீடு தேவைப் படுகிறது.

இந்த பணிகளுக்கான டெண்டர், மார்ச் மாதத்துக்குள் வெளியிடப் படும். ஏப்ரல், மே மாதவாக்கில் துறைமுக பணிகள் தொடங்கும்.

தற்போது, நீர்வழித் தடங்கள் வழியான சரக்கு போக்கு வரத்து 3.5 சதவீதமாக உள்ளது. 2019-ம் ஆண்டுக்குள், இதை 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், 12 பெரிய துறை முகங்களும், 3 சிறிய துறைமுகங்களும் ரூ.6 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த பணம்முழுவதும் துறைமுகங்களை நவீன மயமாக்குவதற்கும், கம்ப்யூட்டர் மயமாக்குவதற்கும் பயன் படுத்தப்படும்.

தற்போது, சுற்றுச் சூழல் பெரிய பிரச்சினையாக உள்ளதால், சுத்தமானதும், மலிவானதுமான திரவ இயற்கை எரி வாயு மூலம் கப்பல்களை இயக்க நாம் கவனம்செலுத்த வேண்டும்.

ஆற்றுப்படுகைகளை தூர்வாரும் பணியை மேற்கொள்ள தேசியநெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாபானர்ஜி உள்ளிட்ட முதல்-மந்திரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். முக்கிய ஆறுகளின் குறுக்கே செல்லும் 111 நீர்வழித் தடங்களை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

மீனவர்கள், கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான படகுகளை வாங்கவேண்டும். அவர்களுக்கு வட்டி இல்லாகடன் வழங்கப்படும். ஆனால், அசலை திருப்பிச் செலுத்தும் வரை, அவர்கள் பிடிக்கும் மீனில் ஐந்தில் ஒருபகுதியை அரசுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று  நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...