வேகமாக வளரும் இந்தியா என்பதே உலகின் ஒத்த கருத்து

வணக்கம். இங்கு கடல் போல் திரண்டிருக்கும் கூட்டத்தினரை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . கோவை,  திருப்பூர், ஈரோடு, போன்ற நகரங்களுக்கு நான் பலமுறை வந்துள்ளேன். குஜராத் முதல்வராக இருக்கும் போது பலமுறை வந்துள்ளேன் . தமிழக மக்கள் காட்டும் அன்பிற்கும், பாசத்திற்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பிரதமரான பின்னர் நான் கோவையில் பொதுகூட்ட மேடையில் பேசுவது இதுவே முதல் முறை.


கோவை மண்ணில் இருந்து நான் நாட்டுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், கடந்த காலங்களில்  ஊழல்கள் தொடர்ந்தன. இளைஞர்கள் பலர் நிற்கதியாக நின்றனர்.  கடந்த காலத்தை நினைத்து பாருங்கள் .


எங்களின் ஆட்சி வந்தபின்னர் இந்த ஒன்றரை ஆண்டில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. தொழிலாளர், கிராமத்தினர் , நகர மக்கள் என அனைத்து தரப்பினரும் நல்ல எதிர்பார்ப்பை நோக்கியுள்ளனர் .


சிலபேருக்கு வலிக்கிறது, கவலை தருகிறது . எப்படிடா டீ விற்றவன் பிரதமராகி விட்டானே என்று. ஆகையால் தான் எனது அரசின் செயல்பாடுகள் அவர்களுக்கு கவலை தருகிறது.  ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், வஞ்சிக்கப் பட்டவர்களை வைத்து அரசியல் நடத்தியவர்களால் ஏழைதாயின் மகனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை


ஊழல் இல்லை. இதனால் இந்தமோடியை என்னடா பண்ணுவது என்று சிந்திக்கின்றனர் . மோடி அரசை செயல்படுத்த முடியாமல் முடக்கி வருகின்றனர். இதனால் ராஜ்ய சபாவில் குழப்பம் விளைவிக்கின்றனர்.

ஏழை எளிய மக்களுக்கு எதிரான சட்டங்களை மக்களவையிலே நீக்கியிரு க்கிறோம். 1800 சட்டங்களில் 700 சட்டங்களை நீக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்புதெரிவித்தது.

பழங்கால சட்டங்களை தூக்கி எறியவேண்டும் என நான் முடிவு எடுத்தால் அதற்கு இடையூறு செய்கின்றனர் .தொழிலாளர், ஏழைகளுக்கு இடையூறு செய்யும் சட்டங்களை நீக்க நினைத்தால் இதற்கும் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் அவர்கள் பொய்யை உரக்கசொல்லி வருகின்றனர் .


விவசாயிகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கு ஆதரவான பல மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. நான் பிரதமராக பதவியேற்றதும் பல்வேறு மாநில முதல்வர்கள் எனக்கு கடிதம் எழுதினர். மாநிலத்தில் யூரியா தட்டுபாடு நிலவுவதாக இருக்கிறது என குறிப்பிட்டனர்.

ஆனால் 2015க்குப் பிறகு அப்படி ஒருநிலை எங்கும் இல்லை. நாம் தேவையான அளவில் யூரியாவை உற்பத்தி செய்து காட்டியுள்ளோம். யூரியா கள்ளச்சந்தையில் விற்பது தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எங்காவது நிலுவைத்தொகை இருப்பதாக புகார் வந்துள்ளாதா.. 60 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கிடைக்காத பல நல்ல திட்டங்கள் இந்த 15 மாதத்தில் கிடைத்துள்ளது. இதனால் ரொம்பபேருக்கு தூக்கம் போச்சு.

அதேபோல கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எங்காவது நிலுவைத்தொகை இருப்பதாக புகார் வந்துள்ளாதா.. 60 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கிடைக்காத பல நல்ல திட்டங்கள் இந்த 15 மாதத்தில் கிடைத்துள்ளது. இதனால் ரொம்பபேருக்கு தூக்கம் போச்சு.

இமாலய ஊழல்களின் மூலம் இளைஞர்கள் நம்பிக்கையை இழந்திருந்த நிலையில், பா.ஜ. ஆட்சியின் மூலம், மக்களுக்கு ஒருபுது உத்வேகம் பிறந்துள்ளது. இந்த ஒன்றரை ஆண்டு கால பா.ஜ. ஆட்சியில், எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இதை எதிர்க் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே, அவர்கள் தங்களது கோபத்தை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் காட்டி வருகின்றனர் .

இந்த நாட்டில் உள்ள மக்களில் 65 சதசவீத்த திற்கும் மேற்பட்ட மக்கள் 35 வயதுடையோர். எனவே இந்நாடு இளைமையான நாடு. இளைஞர்களே மேக்இன் இந்தியா திட்டம் ஏன் நாம் கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் இளைஞர்களூக்கு வேலைவாயுப்பு அதிகரித்துள்ளது. உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த ஓராண்டில் அந்நிய நாட்டின் நேரடிமுதலீடு பெருமளவு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசும்போது பொதுத்துறை தனியார் துறையை மட்டுமே கவனிக்கிறது.

நான் இந்த இரண்டையும் தவிர்த்து மூன்றாவதாக பார்ப்பது தனிமனித வளர்ச்சி. தனிமனிதனின் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றால் தான் நாடு முழுமையான வளர்ந்த நாட்டாக இருக்கும் ஆகவேதான் நம் அரசு முத்ரா யோஜனா திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். சிறுதொழில் செய்வோருக்கு நிதி அளிக்க வேண்டும் என கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 2 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

அதுபோல அரசு பணியில் சேர லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு மிகப்பெரிய ஒரு முடிவை இந்த அரசு இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.


நாடுமுன்னேற வேண்டுமானால் அமைதியும், நிம்மதியும் இருக்கவேண்டும். உலகில் உள்ள பல்வேறு நிதி அமைப்புகளின் ஒத்தகருத்து எது தெரியுமா? உலகில் வேகமாக வளரும் நாடு இந்தியா என்பது தான் அக்கருத்து.

 

பாரதிய ஜனதாகக் கட்சியின் பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியது

 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...