தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு

 தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து நீடிப்பார் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தேசிய அலுவலக செயலாளர் அருண் குமார் ஜெயின் வெளியிட்ட செய்தியில், ‘தமிழக பாஜக.,வின் தற்போதைய தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், அப்பொறுப்பில் தொடர்வார் என தேசியத்தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

பாஜக விதிகளின்படி கிளைகமிட்டி முதல் அகில இந்திய தலைவர் வரை அனைத்து பதவிகளுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். 2009, 2012-ல் நடந்த தேர்தல்களில் மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் மத்திய அமைச்சர் ஆனதால் 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் நடந்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டதால் பாஜக உள்கட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது. கிளை, நகர, ஒன்றிய அளவில் தேர்தல்தொடங்கிய நிலையில் கன மழையால் திட்டமிட்டபடி டிசம்பர் இறுதிக்குள் மாநிலத்தலைவர் தேர்தலை நடத்த முடிய வில்லை.இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் தமிழிசை சவுந்தர ராஜன் தொடர்வார் என அமித்ஷா அறிவித்துள்ளார்.

நம்பிக்கைக்கு நன்றி
அடிமட்டதொண்டராக இருந்த எனக்கு, மாநில தலைமை பொறுப்பு கொடுத்ததோடு, மீண்டும் பதவிநீட்டிப்பு செய்துள்ளனர். 2016 சட்ட சபை தேர்தல்பணியை வேகப்படுத்தவும், பாஜக., ஆட்சியை ஏற்படுத்தவும் கூடுதல் உந்துசக்தியை இது அளிக்கிறது. என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, தொடர்ந்து பணியா ற்றுவேன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...